தமிழ்நாடு

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் குஷ்பு: என்ன காரணம்?

Published

on

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பூ காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று திமுக மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காவல்துறை அலுவலகத்தில் குஷ்பு அளித்த புகாரில் தான் போட்டியிடும் ஆயிரம்விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், இதேபோல் திமுகவினர் துறைமுகம் தொகுதியிலும் வன்முறையை தூண்டுவதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் வேண்டுமென்றே வன்முறையை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்த சதி செய்வதாகவும் இதற்கு திமுகவினரே காரணம் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, நான் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசித்து வருகிறேன். இங்கு தான் என் குடும்பம் இருக்கிறது. நான் இந்த மண்ணின் பெண், எனக்கு இங்கு தேர்தலில் போட்டியிடவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை இருக்கிறது. நான் கண்டிப்பாக தேர்தலில் நிற்பேன், பிரச்சாரம் செய்வேன், வெற்றியும் பெறுவேன் என்று கூறியுள்ளார்.

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் திடீரென்று சென்று குஷ்பூ திமுக மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version