தமிழ்நாடு

கடலில் குதிக்கும் ராகுல் காந்தி, ஏன் தரையில் போராடவில்லை? குஷ்பு கேள்வி!

Published

on

கடலில் குதிக்கும் ராகுல் காந்தி ஏன் தரையில் நின்று போராட வில்லை என பாஜக பிரபலமும் நடிகையுமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் ராகுல் காந்தி மீனவர்களுடன் இணைந்து கடலில் குதித்த வீடியோ வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் பொதுமக்களால் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து கேலி செய்யும் வகையில் நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

கடலில் குதித்து நீச்சல் அடிக்கும் ராகுல் காந்தி ஏன் தரையில் நின்று போராட்டம் நடத்தவில்லை என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் போன்ற எரிபொருள் விலை உயர்வு என்றால் காங்கிரஸ் கட்சிதானே முதலில் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால் கடலில் குதிக்கும் ராகுல் காந்தி ஏன் தரையில் நின்று எரிபொருள் உயர்வுக்கு எதிராக போராடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கடலில் குதிப்பதும், குஸ்தி எடுப்பதும் ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகல்ல என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஒரு சில ஆண்டுகள் ராகுல் காந்தியை தலைவராக ஏற்றுக்கொண்ட குஷ்பு இந்த விமர்சனத்தை தவிர்த்திருக்கலாம் என்று பாஜகவினர் சிலரே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version