தமிழ்நாடு

பொய்யான வாக்குறுதி கொடுத்து மாணவர்களை குழப்பும் ஸ்டாலின்: குஷ்பு விமர்சனம்

Published

on

நீட் தேர்வு விஷயத்தில் தேர்தலுக்கு முன் பொய்யான வாக்குறுதி கொடுத்த முக ஸ்டாலின் தற்போது அதை வேறு வடிவத்தில் பொய்யான நம்பிக்கையை மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், நீதிமன்றம் தற்போது சரியான கேள்வியைக் கேட்டு உள்ளது என்று குஷ்பு விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என்றும், நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

இது குறித்து குஷ்பு தனது டுவிட்டரில் கூறிய போது தேர்தலுக்கு முன் முக ஸ்டாலின் அவர்கள் பொய்யான வாக்குறுதியை அளித்து பதவிக்கு வந்து விட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய வடிவத்தில் நீட் தேர்வு இல்லை என்று மாணவர்களை குழப்பி அவர்களுடைய எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளார். இந்த நிலையில் நீதிமன்றம் சரியான கேள்வியை கேட்டு உள்ளது. இந்த கேள்விக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்’ என்று குஷ்பு தெரிவித்துள்ளார்

குஷ்புவின் இந்த விமர்சனத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version