தமிழ்நாடு

ஹெலிகாப்டர் விபத்து எதிரொலி: மேட்டுப்பாளையம் – குன்னூர் போக்குவரத்து நிறுத்தம்!

Published

on

குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை சுமார் 11.40 மணிக்கு முப்படை தளபதிம் பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு தீயில் கருகி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட முதலமைச்சர் முக ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் உள்பட பலரும் குன்னூருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையிலும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி சாலை மார்க்கமாக மட்டுமே அனுமதிக்கப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version