தமிழ்நாடு
கும்பகோணத்தில் பள்ளி ஆசிரியை காரில் கடத்தல்: மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு!
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மர்ம ஆசாமிகளால் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளார். இது அந்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் லால் பகதூர் சாலையில் உள்ள ஏஜேசி மேல்நிலை பள்ளியில் காயத்ரி என்ற ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை காயத்ரிக்கு 31 வயது. இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. காயத்ரியின் தாய் மீரா, தந்தை கிரிராசன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் ஆசிரியை காயத்ரி வீடு திரும்பியபோது மகாமககுளம் அருகே நீல நிற குவாலிஸ் கார் மோத அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த காரில் இருந்த மர்ம நபர்கள் ஆசிரியை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இதனையடுத்து கடத்தப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினர் கும்பகோணம் மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் இறங்கியுள்ளனர். விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.