இந்தியா
எல்லாத்தையும் செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறார் எடியூரப்பா: குமாரசாமி கடும் தாக்கு!
கர்நாடக அரசியலில் மிகவும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் நேற்று அமளி ஏற்பட்டதால் அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் சட்டசபையிலேயே தூங்கினர்.
இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர்பாய் வாலா கெடு வித்தித்தார். இதற்கு முன்னர் நேற்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் ஆளுநர் அதனை ஏற்காததால் இந்த கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநரின் இந்த வலியுறுத்தலுக்கு எதிராக கர்நாடகா முதல்வர் குமாரசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதற்கிடையில் கர்நாடக சட்டசபையில் இன்று பேசிய குமாரசாமி, இந்த ஆட்சி அமைவதற்கு முன்பு எடியூராப்பாவுக்கு தான் முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தவில்லை.
எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல எதிர்வரிசையில் அமர்ந்திருக்கிறார் எடியூரப்பா. தரம்சிங் ஆட்சியின் போது முதுகில் குத்துவது போல் நடைபெற்ற சம்பவங்களை நினைத்து இப்போது நான் வருத்தப்படுகிறேன். நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன என கடும் காட்டமாக பேசினார் குமாரசாமி.