தமிழ்நாடு

‘மக்கள் நீதி மய்யத் தலைவர் எங்க கூட சேர்ந்தா…’- காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி சூசகம்

Published

on

காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியில் மக்கள் மய்யத் தலைவர் சேர விரும்பினார் நாங்கள் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பல கட்சிகளும் தங்களது பிரசாரப் பணிகளைத் தொடங்கி உள்ளனர். கட்சித் தலைவர்களுக்கு மத்தியில் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகம் ஒன்றில் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி கூறுகையில், “காங்கிரஸ், விசிக, திமுக என மதச்சார்பின்மை பேசும் அத்தனைக் கட்சிகள் கூட்டணி ஆக ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடிவு செய்து பயணித்தும் வருகிறோம். இத்தகைய சூழலில் மதச்சார்பின்மை குறித்து அதிகம் பேசி வருபவராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் இருக்கிறார். அவர் எங்கள் கூட்டணியில் இணைந்தால் நிச்சயமாக அந்த முடிவை வரெவேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version