தமிழ்நாடு

நல்ல விஷயங்களை பற்றி தயவுசெய்து குஷ்பு பேச வேண்டாம்: கே.எஸ்.அழகிரி

Published

on

நடிகையும் பாஜக பிரபலமான குஷ்பு சமீபத்தில் ராகுல்காந்தி கடலில் குதித்ததையும், மாணவியுடன் குஸ்தி எடுத்ததையும் கேலி செய்து ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது: நல்ல தலைமையை பற்றி, நல்ல பண்புகளைப் பற்றி, நல்ல நடத்தையை பற்றி, நல்ல செய்கைகளைப் பற்றி தயவுசெய்து குஷ்பு பேச வேண்டாம் என்று கூறினார். மேலும் கூட்டணி குறித்து அவர் அவரிடம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்டிருக்கின்றோம், அவர்கள் எத்தனை தொகுதிகள் கொடுக்கப் போகிறார்கள் என்று வெளிவந்த செய்திகள் எல்லாம் யூகங்கள். தொகுதிகள் எங்களுக்கு முக்கியமல்ல, கூட்டணி தான் முக்கியம்.

10 வருடம் ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது. அந்த ஆட்சியை திமுக கைப்பற்ற வேண்டும், அதற்கு எங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version