தமிழ்நாடு

தெரியாமல் அழைப்பு விடுத்தேன்: கமலுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Published

on

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இணைய வேண்டும் என சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் திமுகவை கமல் விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். ஊழல் பொதியை நாங்கள் சுமக்க முடியாது. மக்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்னர் கமல் விமர்சித்திருந்தார். இந்த சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாளராக, சனாதன எதிர்ப்பாளராக, இடதுசாரி சிந்தனையாளராகத் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் பாஜக, அதிமுக மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணைய வேண்டும் கருத்து கூறினேன். அந்தக் கருத்தை நான் கூறும்போது, திமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்துக்கு வரவில்லை.

கமல்ஹாசன் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்தக் கொள்கைகளுக்கும் உதவாது. அவர் அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஓர் அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிதான் முடிவு செய்யும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version