கிரிக்கெட்

ரத்து செய்யப்பட்ட இலங்கையுடனான 2வது டி20: இந்த இந்திய வீரருக்கு கொரோனா!

Published

on

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டி20 தொடர் நடந்து வருகிறது.

ஒருநாள் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. தொடர்ந்து முதல் இருபது ஓவர் போட்டியிலும் வெற்றி வாகை சூடியுள்ளது இந்திய அணி.

இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடக்க இருந்தது. ஆனால், திடீரென்று போட்டி ஒரு நாள் தள்ளி வைக்கப்படுவதாக செய்தி வெளி வந்தது.

இது ஏன் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தகவல் தெரிவித்து உள்ளது. பிசிசிஐ வெளியிட்ட தகவல்படி, ‘குருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இலங்கை – இந்தியா இடையேயான இரவண்டாவது டி20 போட்டி ஜூலை 28 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மொத்த அணிக்கும் தற்போது கொரோனா சோதனை எடுக்கப்பட்டு தொற்று பாதிப்பு வேறு யாருக்கும் இல்லை என்பது உறுதி செய்யப்படும்’ என்று தெரிவித்து உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version