Connect with us

தமிழ்நாடு

கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் தாக்கப்பட்டாரா? என்ன சொல்கிறார்கள் நிரூபர்கள்!

Published

on

கடந்த மாதம் 28-ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிரூபர் ஒருவரை பார்த்து நீ என்ன சாதி என கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியை தாக்க வந்ததாக அவரது சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதனை நிரூபர்கள் மறுத்துள்ளனர்.

தேர்தல் தோல்விக்கு பின்னர் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் கிருஷ்ணசாமி. இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தனர். அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி சில இடங்களில் ஒருமையிலும், பல கேள்விகளுக்கு கோபமாகவும் பதிலளித்தார்.

ஒரு கட்டத்தில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவரை பார்த்து கோபமாக நீ என்ன ஊர், என்ன ஜாதி என சர்ச்சைக்குறிய கேள்வியை கேட்டார். இதனால் சக பத்திரிக்கையாளர்கள் கோபமடைய அந்த இடம் பரபரப்பானது. இதனையடுத்து கிருஷ்ணசாமி பத்திரிக்கையாளரை பார்த்து என்ன சாதி என கேட்டதற்கு பத்திரிக்கையாளர் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. அரசியல் கட்சி தலைவர்களும் கிருஷ்ணசாமியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணசாமி சார்பில் கேள்வி கேட்ட நிரூபர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 நிருபர் கோகுல் மற்றும் புதிய தலைமுறை, ரெட் பிக்ஸ், ஜெயா தொலைக்காட்சி நிருபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நிரூபர்கள் கிருஷ்ணசாமியை தாக்க வந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நிரூபர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அந்த செய்தியாளர் சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடந்தது. நேரலை ஒளிபரப்பும் செய்யப்பட்டது. உண்மையில் யாரை யார் தாக்க வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். புகாரை சட்டப்படி எதிர் கொள்வோம் என கூறியுள்ளனர் நிரூபர்கள்.

author avatar
seithichurul
வணிகம்8 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்11 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா11 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!