தமிழ்நாடு
கிருஷ்ணகிரி படுகொலை: எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்!
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற இளைஞரை, பெண்ணின் உறவினர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் மாமனார் சங்கர் கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்து, மகள் காதல் திருமணம் செய்த விரக்தியில் மருமகனை கொலை செய்ததாக சங்கர் வாக்குமூலம் அளித்த நிலையில். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
![EPS 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/03/EPS-2-3.jpg)
#image_title
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு பேரவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த ஜெகன் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட ஆணவ கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற இளைஞரை பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமூக நீதி காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.