சினிமா செய்திகள்

தமிழ் திரைப்படம் முதல்முதலில் வாங்கும் விருது: நயன்தாராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Published

on

தமிழ் திரைப்படம் ஒன்று முதல் முதலாக சர்வதேச விருது ஒன்றை வாங்கிகிறது என்பதும் அந்த திரைப்படத்தை தயாரித்தது நயன்தாரா என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்த திரைப்படம் ’கூழாங்கல்’. இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படம் சர்வதேச டைகர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது.

இந்த விருது நடக்கும் நிகழ்ச்சியில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டின் டைகர் விருது சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விருது ’கூழாங்கல்’ என்ற திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் வழங்கப்படும் டைகர் விருதை பெறும் முதல் தமிழ்படம் ’கூழாங்கல்’ தான் என்பதால் இந்த படத்தை தயாரித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்கிய இந்த படத்தில் பெரும்பாலானோர் புதுமுகங்கள் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச டைகர் விருதை இந்த படம் பெற்றுள்ளதை அடுத்து விரைவில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version