இந்தியா

தமிழக முன்னாள் ஆளுனர் ரோசய்யா உடல் நலக்குறைவால் மரணம்..

Published

on

தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஆளுனராக இருந்தவர் ரோசய்யா. அப்போது முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோசய்யா ஆந்திர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 2009ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை அவர் ஆந்திர மாநிலத்தில் முதல்வராக பதவி வகித்துள்ளார். சட்டமன்றம் உறுப்பினர், துணை முதல்வர், மேல்சபை எம்.பி. என பல பதவிகளில் அவர் இருந்துள்ளார்.

தற்போது அவருக்கு வயது 55 ஆகிறது. எனவே, முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version