கிரிக்கெட்
ரானாவின் அபார பேட்டிங்கால் கொல்கொத்தா அணி சூப்பர் வெற்றி!
நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் ராணா மிக அபாரமாக பேட்டிங் செய்து தனது அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரானா, மிக அபாரமாக விளையாடி 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 80 ரன்கள் அடித்தார். அதேபோல் ராகுல் திரிபாதி 53 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இன்று மும்பை மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.