சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 1வது கொலையுதிர் காலம் ரிலீசாகுமா?

Published

on

உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 படங்களை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கத்தில் நயன்தாரா லீடு ரோலில் நடித்த கொலையுதிர் காலம் படம் ஏற்கனவே பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், தள்ளிப் போடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 1 படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த தேதியிலும் படம் வெளியாகுமா என்பது கேள்விக் குறிதான்.

இந்த படத்தின் நிகழ்ச்சியில் தான் நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி அவதூறாக பேசியதாக மிகப்பெரிய பிரச்னை வெடித்தது.

அந்த விஷயத்தில் இருந்து இந்த படம் குறித்த எந்த ஆர்வத்தையும் நயன்தாரா தரப்பில் இருந்து எடுக்கவே இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

சக்ரி டொலட்டியும் படம் குறித்த நிகழ்ச்சிகளுக்கோ புரமோஷன் பணிகளையோ கவனிக்காததால் படத் தயாரிப்புக் குழு என்ன செய்வது என்றே தெரியாமல் ரிலீஸ் செய்ய போராடிக் கொண்டு இருக்கிறது.

மேலும், இதே படம் இந்தியில் காமோக்‌ஷி என தலைப்பிட்டு எடுக்கப்பட்டது. அதில், பிரபுதேவா, தமன்னா நடித்திருந்தனர். ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்ததால், கொலையுதிர் காலம் பக்கம் ரசிகர்கள் ரிலீசானாலும் செல்வார்களா என்பது சந்தேகம் தான்.

Trending

Exit mobile version