கிரிக்கெட்
மனைவி கொடுத்த மோதிரத்திற்கு முத்தம்.. கோஹ்லியின் வாவ் செஞ்சுரி கொண்டாட்டம்!
லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் செஞ்சுரி அடித்த கோஹ்லி, தனது சதத்தை தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் மிகவும் மோசமான பேட்டிங் தொடக்கத்தை கொடுத்த இந்தியா, கடைசியில் கோஹ்லியின் அதிரடியால் தப்பித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டிற்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா 274 ரன்கள் எடுத்துள்ளது. இதில் கோஹ்லி அதிரடியாக 149 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் கோஹ்லி எடுக்கும் முதல் சதம் ஆகும் இது.
இந்த சதத்தை எடுத்துவிட்டு கோஹ்லி, ஆடியன்ஸ் இருக்கையில் அமர்ந்து இருந்து அனுஷ்கா சர்மாவை பார்த்து கையசைத்தார். பின் அவர்களின் திருமண மோதிரத்தை எடுத்து முத்தம் கொடுத்து அந்த சதத்தை தனது மனைவி அனுஷ்காவிற்கு சமர்ப்பித்தார். இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.