சினிமா
சாதித்து காட்டிய விஜய் ஆண்டனி… கோடிகளை வசூலித்த ‘கோடியில் ஒருவன்’….
மெட்ரோ திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். சமூக பிரச்சனைகளை கண்டு கொதித்தெழும் ஒரு சாதாரண மனிதன் வேடத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.
கோடியில் ஒருவன் திரைப்படம் கடந்த 17ம் தேதி திரையரங்கில் வெளியானது. பலரின் திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் ஆண்டனி தைரியமாக இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டார். இத்தனைக்கும் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.5 கோடியை வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் மேலும் சில கோடிகள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடந்த நிலையில், இந்த வசூல் தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால் பிரபல ஓடிடி நிறுவனங்களும் இப்படத்தை வாங்க போட்டி போட்டு வருகின்றனவாம்.