தமிழ்நாடு
எடப்பாடி பழனிச்சாமி சிறை செல்வது உறுதி: மேத்யூ சாமுவேல் அதிரடி பேட்டி!
![Edappadi Palanisamy 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/Edappadi-Palanisamy-2-1.jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கொலைகாரர் என தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் குற்றம் சாட்டியுள்ளார். ஐந்து பேரை கொலை செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறை செல்வது உறுதி என அதிரடியாக பேட்டியளித்துள்ளார் மேத்யூ சாமுவேல்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் இருந்து ஆவணப்படத்தை வெளியிட்டு பேட்டியளித்ததும், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளது என இந்த வழக்கில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் கூறியுள்ளது அளித்த பேட்டி முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் முதல்வர் தரப்பு புகாரின் பேரில் தமிழக காவல்துறை டெல்லி சென்று கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று மேத்யூ சாமுவேல் செய்தியாளர்களிடம் பேசியபோது, எங்களுக்கு வந்துள்ள உறுதியான தகவலின்படி எடப்பாடி பழனிசாமி தான் 5 பேரையும் கொலை செய்துள்ளார் என்பது எங்களுடைய குற்றச்சாட்டு. இதில் எந்த சந்தேகமுமில்லை. இதுதான் என்னுடைய நிலைப்பாடு. எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி. இதிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. நான் சொல்கிறேன் அவர் ஒரு கொலைகாரர். 5 பேரை கொலை செய்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும், நான் தீவிரவாதி அல்ல, வங்கியையும் கொள்ளையடிக்கவில்லை. எனவே என்னைக் கைது செய்தால் எதிர்கொள்வேன். ஆவணங்களுடன் சொல்கிறேன் பழனிசாமி ஒரு கொலைகாரர். இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்த மத்திய அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தட்டும். ஆனால், அந்த விசாரணைக் குழுவை அவர் அமைக்கக் கூடாது.என்னுடைய போர் தொடங்கிவிட்டது. இதிலிருந்து விடுபடப் போவதில்லை என்றார் மேத்யூ சாமுவேல். இவரது இந்த பேட்டி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.