தமிழ்நாடு

கொடநாடு கொலை: எடப்பாடி மீது திரும்ப உள்ள நீதிமன்ற வழக்கு!

Published

on

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சயன், மற்றும் மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டியிலும் எடப்பாடி பழனிச்சாமி தான் இதன் பின்னணியில் இருந்தார் என தெரிவித்தார். அரசியலில் பெரும் புயலை வீசி வரும் இந்த குற்றச்சாட்டால் அதிமுக வட்டாரம் கதிகலங்கி நிற்கிறது. இந்நிலையில் சயன் மற்றும் மனோஜை கைது செய்த தமிழக காவல்துறை அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது எடப்பாடி தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்த சூழலில் பிப்ரவரி 2-ஆம் தேதி கொடநாடு கொலை மற்றும் கொள்லை தொடர்பான வழக்கின் விசாரணை நடக்க உள்ளது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டிய சயன் மற்றும் மனோஜ் பிப்ரவரி 2-ம் தேதி நீதிமன்றத்தில் என்ன சொல்வார்கள் என்பதுதான் இந்த வழக்கின் அடுத்த திருப்பத்தை தீர்மானிக்கும். இதுவரை நீதிமன்றத்தில் எதுவும் சொல்லாமல் இருந்த சயன் மற்றும் மனோஜ் தங்களை அப்ரூவர் ஆக பதிவு செய்துகொண்டு ஆவணப்படத்தில் சொன்னதையே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்தால் அது எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாக திரும்பும். எடப்பாடி பழனிச்சாமியை நோக்கியே இந்த வழக்கு பாயும்.

seithichurul

Trending

Exit mobile version