தமிழ்நாடு

கொடநாடு வழக்கை விசாரித்து வரும் டி.எஸ்.பி சுரேஷ் பணி இட மாற்றம்!

Published

on

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் திடீரென இந்த வழக்கை விசாரணை செய்துவரும் டி.எஸ்.பி சுரேஷ் என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கில் தற்போது தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் விசாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொடநாடு வழக்கை விசாரித்து வரும் இன்னொரு டிஎஸ்பி சுரேஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரசேகரர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொட நாடு வழக்கை டிஎஸ்பி சுரேஷ் விசாரணை செய்து வந்த நிலையில் திடீரென அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக அதிமுக பிரமுகர் சஜீவனிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது தனது சஜீவன் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version