தமிழ்நாடு

கொடநாடு கொலை.. முதல்வர் பழனிச்சாமிதான் கொலையாளி.. மேத்யூஸ் பரபர!

Published

on

டெல்லி: கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி மீது தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் புதிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம கொலைகள் தொடர்பாக நேற்று முதல்நாள் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார்.இந்த நிலையில் மேத்யூஸ் சாமுவேல் பேட்டி அளித்தார். தான் வெளியிட்ட ஆவணங்கள் தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார்.

தமிழக முதல்வர் பழனிச்சாமிதான் கொலையாளி என்று நான் குற்றஞ்சாட்டுகிறேன். 5 கொலைகளை அவர் செய்துள்ளார் என்று நான் குற்றஞ்சாட்டுகிறேன். இந்திய வரலாற்றில் முதல்முறை முதல்வர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கியுள்ளார்.

என்னுடைய பத்திரிகை துறை வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள். நான் யாரை பற்றியும் தவறாக குற்றஞ்சாட்டியது இல்லை. நான் குற்றஞ்சாட்டிய எல்லோரும் சிறை சென்று இருக்கிறார்கள். ஒருவர் கூட வெளியே வந்தது கிடையாது.

இந்த பொங்கலுக்கு எடப்பாடி பழனிசாமி வெளியே இருக்கிறார். அடுத்த பொங்கலுக்கு எடப்பாடி பழனிசாமி சிறையில் இருப்பார். நான் அவரை சிறையில் சென்று சந்திப்பேன். கோர்ட்டிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. நான் தண்டனை வாங்கி கொடுப்பேன்.

இது பத்திரிகை துறை, நான் பத்திரிகையாளன் என்ற முறையில் இப்படி செய்கிறேன். என்னை கைது செய்யட்டும். நான் அச்சப்பட மாட்டேன். ஆனால் உண்மை வெளியே வரும். என்னை கைது செய்தால் முறைப்படி கைது செய்யட்டும்.

seithichurul

Trending

Exit mobile version