கிரிக்கெட்
கே.எல். ராகுல் அடுத்த IPL-ல் RCB-க்கு மாறுவாரா? புதிய தகவல் வெளியீடு!
ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. இதனால், அடுத்த ஆண்டு IPL தொடரின் மெகா ஏலத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது முதலே தொடங்கிவிட்டது.
இந்த சூழலில், லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பற்றி ஒரு முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
கசிவு தகவல் என்ன?
அடுத்த ஆண்டு IPL தொடரில் கே.எல்.ராகுல் டிரேடிங் முறையில் RCB அணிக்கு செல்ல உள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
டூபிளிசிக்கு பதிலாக புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் வாய்ப்பு பெறலாம்.
2013 மற்றும் 2016 சீசன்களில் கே.எல்.ராகுல் பெங்களூர் அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெகா ஏலத்தில் புதிய விதிமுறைகள்:
ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், 1 வீரருக்கு “ரைட் டூ மேட்ச்” கார்டு பயன்படுத்தவும் பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
குறிப்பு:
இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருப்பது நல்லது.