சினிமா செய்திகள்
ஒருவழியாக ‘டாக்டர்’ ரிலீஸ் தகவலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சுமார் 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா? அல்லது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? என்ற குழப்பமான நிலையில் இருந்தது.
மேலும் யூடியூப் சேனல் நடத்திவரும் ஒரு சிலர் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்தாகி விட்டது என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறினார்கள். ஆனால் இந்த படம் ரிலீஸ் குறித்த எந்த தகவலையும் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்காமல் அமைதி காத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ‘டாக்டர்’ படத்தின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க ‘டாக்டர்’ திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என்றும் சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் ஓடிடியில் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன், வினய் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
Set all the speculations aside. Get ready for your laughter shot! #Doctor is coming to the big screen in October 2021!????
This decision is only for the fans and our dearest theatre owners ❤️#DoctorInTheatres @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl pic.twitter.com/rmDOqV2PVc— KJR Studios (@kjr_studios) September 9, 2021