இந்தியா

இன்னமும் ஆளுநர் மாளிகையில் குடியிருக்கும் கிரண் பேடி… புதிய சர்ச்சை!

Published

on

புதுவை ஆளுநர் மாளிகையை இன்னமும் காலி செய்யாமல் குடியிருந்து வரும் முன்னாள் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராகப் புது சர்ச்சை எழுந்துள்ளது.

புதுச்சேரி ஆளுநராகப் பதவி வகித்து வந்த கிரண் பேடியை சில நாட்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியைவிட்டு நீக்கினார். அதன் பின்னர் புதுச்சேரி ஆளுநர் ஆக தெலங்கானா ஆளுநர் தமிழிசை நியமிக்கப்பட்டார். புதுச்சேரியை கூடுதல் பொறுப்பாக தெலங்கானா அளுநர் தமிழிசை ஏற்றுக் கொண்டுள்ளார்.

புதுவை ஆளுநர் மாற்றப்பட்டால் அடுத்த ஆளுநர் பதவி ஏற்கும் போது பழைய ஆளுநர் ராஜ் நிவாஸ் மாளிகையைவிட்டு காலி செய்துவிட வேண்டும். ஆனால், தமிழிசை ஆளுநராகப் பொறுப்பேற்று இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரையில் புதுவை ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸ் மாளிகையைவிட்டு கிரண் பேடி இதுவரையில் காலி செய்யவில்லை. இது புது வித சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஆளுநர் மாளிகையில் போடப்பட்டிருந்து ஐந்து அடுக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் ஆளுநர் மாளிகையை காலி செய்துவிட்டனர். மாளிகையைச் சுற்றி போடப்பட்டிருந்த வேலிகளும் இன்று அகற்றப்பட்டுவிட்டன.

seithichurul

Trending

Exit mobile version