கிரிக்கெட்

ஐபிஎல் ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணியின் பெயர் மாறுகிறது..!- புதிய பெயருக்கு பிசிசிஐ ஒப்புதல்?

Published

on

வருகிற ஐபிஎல் 2021 போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது பெயரை மாற்ற உள்ளதாகவும் அதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஐபிஎல் 2021 போட்டிகளுக்கான ஏலம் வருகிற பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சுமார் 1,097 வீரர்கள் இந்த ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் பங்குபெற உள்ளன. இவர்களில் இருந்து ஐபிஎல் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுப்பார்கள்.

இந்த சூழலில் இந்த ஐபிஎல் முதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது பெயரை மாற்றிக் கொள்வதாக பிசிசிஐ நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வ அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. அதாவது கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரை ‘பஞ்சாப் கிங்ஸ்’ எனப் பெயர் மாற்றிக் கொள்வதாக அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

வருகிற ஐபிஎல் 2021 முதலே ‘பஞ்சாப் கிங்ஸ்’ எனப் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கு பிசிசிஐ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version