இந்தியா

நக்ஸலைட்களால் கடத்தப்பட்ட ராணுவர் வீரர் விடுதலை: மனைவியின் வேண்டுகோளை ஏற்றனர்!

Published

on

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நக்சலைட்டுகளால் ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவருடைய மனைவியின் வேண்டுகோளை அடுத்து தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகேஷ்வர் சிங் என்ற ராணுவ வீரர் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டார்/ இதுகுறித்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது கணவரை நக்சலைட்டுகள் விடுதலை செய்ய வேண்டும் என்று மிகவும் பணிவுடன் ராகேஷ்வர் சிங் மனைவி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை அடுத்து தற்போது கடத்தப்பட்டு இருந்த ராகேஷ்வர் சிங் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை ராணுவத்துக்கும் நக்சலைட்டுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தான் ராணுவ வீரர் ராகேஷ்வர் சிங் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version