சினிமா

வெள்ளி நிற உடையில் மணமக்கள்; கோலாகலமாக நடைபெற்ற கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்!

Published

on

பிரபல பாலிவுட் நடிகர்களான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் இன்று ஜெய்சால்மரில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

பிப்ரவரி 6ம் தேதி இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் திருமண தேதி பிப்ரவரி 7 என்கிற தகவல்கள் வெளியாகின.

#image_title

சமீபகாலமாக நடைபெறும் பிரபலங்களின் திருமணங்களுக்கு மீடியாவுக்கு அழைப்புக் கொடுப்பதில்லை. ஓடிடியில் பெரிய தொகைக்கு திருமணங்களை பிசினஸ் செய்து வரும் நிலையில், கியாரா அத்வானி – சித்தார்த் மல்கோத்ரா திருமணம் செய்து கொண்டனர் என்பதை அந்த திருமணத்தில் பழங்களை கொண்டு செல்லும் நபர்கள் அளித்த பேட்டி மூலம் வட இந்திய மீடியாக்கள் உறுதி செய்துள்ளன.

கியாரா அத்வானி மற்றும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா இருவரும் வெள்ளி நிற உடையில் ஜொலி ஜொலித்தனர் என திருமண நிகழ்ச்சியில் பணி செய்தவர்கள் கூறிய தகவல்களும் வெளியாகி உள்ளன. விரைவில் மணமக்களின் எக்ஸ்க்ளூசிவ் திருமண புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title

நடிகை கியாரா அத்வானி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் ஆர்சி15ல் ஹீரோயினாக நடித்து வருகிறார். இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ஷெர்ஷா படத்தில் சித்தார்த் மல்கோத்ரா – கியாரா அத்வானி இருவரும் இணைந்து நடித்த நிலையில், காதலித்தனர். உடனடியாக தங்கள் திருமணத்தை பல ஆண்டுகள் கடத்தாமல் செய்துக் கொண்டனர்.

seithichurul

Trending

Exit mobile version