தமிழ்நாடு

சொந்த அப்பாவால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குஷ்பூ: பகீர் சம்பவம்!

Published

on

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையும், பாஜக பிரபலமுமான குஷ்பூ தனது சிறு வயதில் தனது சொந்த அப்பாவால் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

#image_title

பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய குஷ்பூ, ஒரு குழந்தையை துஷ்பிரயோகம் செய்தால் அது அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் வடுவாக ஆறாமல் இருக்கும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி என்றார்.

தொடர்ந்து பேசிய குஷ்பூ தனது தனிப்பட்ட சிறு வயது வாழ்க்கை குறித்து பேசினார். அப்போது, எனது அம்மாவுக்கு மிக மோசமான திருமண வாழ்க்கை அமைந்தது. எனது அப்பா, அம்மாவையும், என்னையும் அடித்து துன்புறுத்தினார். தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தனது பிறப்புரிமை போல் நினைத்துக் கொண்டிருந்தார்.

எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது அவர் என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார். ஆனால் அதனை நான் துணிச்சலுடன் வெளியே சொல்ல 15 வயது ஆனது. நான் வெளியே சொன்னால் எனது குடும்பம் பாதிக்கப்படும் என அஞ்சினேன். கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து வந்த என் அம்மாவே அதனை நம்புவாரா என பயந்தேன். ஆனால் நான் எனது 15-வது வயதில் துனிச்சலாக முடிவெடுத்து எனது அப்பாவுக்கு எதிராக பேசினேன்.

அவர் எங்களை தனியாக விட்டுவிட்டு போய்விட்டார். அடுத்த வேளை உணவுக்கு கூட வழி இல்லாமல் தவித்தோம். எனது குழந்தை பருவம் பல பிரச்சனைகளை கொண்டது என தனது சிறுவயது கஷ்டங்களை பகிர்ந்துகொண்டார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ.

seithichurul

Trending

Exit mobile version