தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு யோசித்து யோசித்து தூக்கம் வரவில்லை: குஷ்பு

Published

on

பிரதமர் மோடி மக்களுக்கு என்ன நல்லது பண்ணலாம் என யோசித்து யோசித்து தூக்கம் வராமல் தவிக்கிறார் என்று பாஜக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பூ தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட பாஜக மேலிடம் சீட் கொடுத்துள்ளது. இதனை தக்க முறையில் பயன்படுத்தி கொள்ளும் குஷ்பு, தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் எழிலன் போட்டியிட்ட போதும் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் மூன்று முறை வெற்றி பெற்ற இந்த தொகுதி, திமுகவிடம் இருந்து கைமாறும் என்றால் திமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவு என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு மிக வேகமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த குஷ்பு பிரதமர் மோடி மக்களுக்கு என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து கொண்டிருப்பதால் அவருக்கு தூக்கமே வரவில்லை என்றும் மக்களுக்காகவே அவர் 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் குஷ்புவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நோட்டாவுக்கு கூட ஓட்டு போடுவோம், ஆனால் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டோம் என தமிழக மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது பேசியுள்ள வீடியோவை தற்போது நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version