சினிமா செய்திகள்

கே.ஜி.எஃப்- 2 படத்துக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுப்பதாகக் கேட்ட ஓடிடி!- மறுத்த படக்குழு

Published

on

கே.ஜி.எஃப்- 2 படத்துக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுப்பதாகக் கூறியும் ஓடிடி வெளியீட்டுக்குத் தர முடியாது என மறுத்துவிட்டதாம் கே.ஜி.எஃப்- 2 படக்குழு.

ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப். கன்னட மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி அத்தனை மொழிகளிலும் ஹிட் கொடுத்தது. கே.ஜி.எஃப் படம் வெளியாகும் போதே அதற்கு இரண்டாம் பாகம் உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது. கதையின் ஒரு பாதி மட்டுமே முதல் பாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இதனால் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்துக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டு வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டு உள்ளது. இந்த சூழலில் கே.ஜி.எஃப்- 2 படத்தை 250 கோடி ரூபாய்க்கு ஓடிடி நிறுவனம் ஒன்று விலை பேசியுள்ளது. ஆனால், திரை அரங்கங்கள் திறந்த பின்னர் திரையில் தான் கே.ஜி.எஃப்- 2 படம் வெளியாகும் என்றும் அதற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார் என்றும் உறுதியாகக் கூறிவிட்டதாம் கே.ஜி.எஃப்- 2 படக்குழு.

seithichurul

Trending

Exit mobile version