ஜோதிடம்

கேது சுக்கிரன் சேர்க்கை: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கிறது!

Published

on

நவகிரகங்களில் சுக்கிரன் என்பது ஆடம்பர, காதல், செல்வம், அழகு போன்றவற்றுக்குத் தேவையான கிரகமாக விளங்குகிறது. சுக்கிரன் அவ்வப்போது தனது இடத்தை மாற்றிக் கொண்டு ராசிகளுக்கு பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறார். 2024 ஆகஸ்ட் 25ஆம் தேதி, சுக்கிரன் கன்னி ராசியில் நுழைந்து, ஏற்கனவே அதில் இருந்த கேது பகவானுடன் சேர்கின்றார். இந்த சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், மூன்று ராசிகளுக்கு இந்த சேர்க்கை மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தரப்போகின்றது.

கடக ராசி: கடக ராசியில் கேது மற்றும் சுக்கிரன் மூன்றாவது வீட்டில் சேர்க்கை ஏற்படுகிறது. இதனால், நீண்ட காலம் தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பின் பலனாக வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

சிம்ம ராசி: சிம்ம ராசியில் இரண்டாவது வீட்டில் கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால், பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் பெருகும். வாழ்க்கையில் வெற்றி, புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி காண்பீர்கள்.

விருச்சிக ராசி: விருச்சிக ராசியின் 11ஆம் வீட்டில் கேது மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்வதால், வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, மற்றும் தொழிலில் லாபம் போன்ற பலன்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் இந்நேரம் உங்களுக்கு சிறந்த காலமாக அமையும்.

 

Poovizhi

Trending

Exit mobile version