இந்தியா

டீக்கடைகாரருக்கு உலக நாடுகளில் இருந்து வரும் அழைப்பு: காரணம் ஒரே ஒரு போர்டு தான்!

Published

on

கேரளாவைச் சேர்ந்த டீ கடைக்காரர் ஒருவர் தன்னுடைய டீக்கடையில் முன்பு வைத்த போர்டு காரணமாக உலக நாடுகளில் இருந்து அவருக்கு அழைப்பு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த வல்லாச்சிரா என்ற பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவர் அந்த பகுதியில் முதலில் லாட்டரி கடை வைத்து அதன் பின் அதனை டீக்கடையாக மாற்றியுள்ளார். தற்போது அவருக்கு வியாபாரம் நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 33 வயதாகும் உன்னிகிருஷ்ணனுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. எனவே அவருடைய ஜாதகத்தை வைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரன் தேடியும் எந்த வரனும் இன்னும் அமையவில்லை. தரகர் மூலம் வரன் பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறும் உன்னிகிருஷ்ணன் தனக்கு பெண் தேவை என தனது டீக்கடை முன்பு போர்டு ஒன்று வைத்துள்ளார்.

மணமகள் தேவை என்று கூறி தன்னுடைய முழு விவரங்களை குறிப்பிட்டு, அதில் ஜாதி மதம் தேவையில்லை என்றும் அந்த போர்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போர்டை அவருடைய நண்பர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பார்த்த பல பெண்கள் அவருடன் தொடர்பு கொள்வதாகவும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்பட பல நாடுகளில் இருந்தும் அவருக்கு அழைப்பு வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஏகப்பட்ட வரன்கள் வருவதாகவும் அதில் எந்த வரனை தேர்ந்தெடுப்பது என்று தனக்கு குழப்பமாக இருப்பதாகவும் உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டீக்கடை முன்வைத்த ஒரே ஒரு போர்டு காரணமாக டீக்கடை காரருக்கு உலக நாடுகளில் இருந்து அழைப்பு குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version