இந்தியா
ஒரே நாளில் 31 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு: கேரளாவில் மீண்டும் லாக்டவுனா?
கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் தினந்தோறும் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 31 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கொரோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,445 என்றும் கொரோவால் பலியானவர்களின் எண்ணிக்கை 215 என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோவால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் எண்ணிக்கை 20,271 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதையடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது