இந்தியா

சபரிமலைக்கு சென்ற பொன்.ராதாகிருஷ்ணன்.. தடுத்து நிறுத்தியது கேரள போலீஸ்!

Published

on

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் சபரிமலை கோவில் பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டல மாகரம் விளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் திறக்கப்பட்டது.

இந்த முறை கோவில் 41 நாட்கள் திறந்து இருக்கும். இது மிக முக்கியமான பூஜையாகும். இந்துத்துவா அமைப்புகள் இந்தமுறையும் பெண்கள் நுழைவிற்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது அங்கு பொன்.ராதாகிருஷ்ணன் செல்ல  முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கடந்த மாதமே இதற்காக மாலை போட்டுள்ளார். விரதம் இருந்து பூஜை செய்து அவர் கோவிலுக்கு சென்றுள்ளார். இருமுடி கட்டி இன்னும் சில ஐயப்ப பக்தர்களுடன் அவர் காலையில் தரிசனமும் செய்வதற்காக சபரிமலைக்கு சென்றார்.

 

 

 

Trending

Exit mobile version