உலகம்

1400 சபரிமலை போராட்டக்காரர்கள் ஒரே நாளில் கைது.. கேரள போலீஸ் அதிரடி

Published

on

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது.

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது. கேரளாவில் மொத்தம் 1400 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டு இருக்கிறது.

பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து நிறைய பேர் கைதாகி உள்ளனர்.கைதானத்தில் 90 சதவிகிதம் பேர் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள்.

அதேபோல் 2000 பேர் மீது 256 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இவர்கள், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கைதுகள் அம்மாநிலத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version