சினிமா செய்திகள்
மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு!
மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆகக் கருதப்படும் நடிகர் மம்முட்டி மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகை மம்முட்டி சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு அருகே ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை என்னும் திட்டத்துக்கு அறிமுக துவக்க விழாவில் மம்முட்டி கலந்து கொண்டு சிறப்பு உரையும் வழங்கினார்.
அப்போதுதான் மம்முட்டி தான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காலில் ஏற்பட்ட தசை நார் சேதத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் தள்ளிப் போட்டுக் கொண்டு வருவதை பகிர்ந்தார். அந்த விழாவில் சுமார் 300-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், பின்பற்றப்பட வேண்டிய கொரோனா விதிமுறைகள் எதுவுமே அங்கு பின்பற்றப்படவில்லை.
இதனால், நடிகர் மம்முட்டி, தனியார் மருத்துவமனை சிஓஓ, எம்டி உட்பட 300 பேர் மீது கேரள போலீஸார் கேரள தொற்றுநோய் சட்டம் 2021 அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.