இந்தியா

நவம்பர் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி திறப்பு: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அல்லது ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்ததால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுகின்றது.

இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் சற்றுமுன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி கேரள மாநிலத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் மாதத்திற்குள் கேரளாவில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version