இந்தியா
மீண்டு வரும் கேரளா.. கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்புகிறது!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது.
கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இது அங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் 50 வருட வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும். கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பி வருகிறது. அங்கு கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் படிப்படியாக வெள்ளம் குறைந்து வருகிறது.
இதனால் தற்போது மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகிறது. விரைவில் கேரளா முழுமையாக சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.