இந்தியா
கேரளா வெள்ளம்: தொடரும் மழை.. பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர்.
கேரளா மாநிலம் மொத்தத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு உள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
அங்கு கடந்த 3 வாரமாக பெய்த கனமழையால் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக வெள்ளம் வீடுகளுக்குள் உள்ளது.
ஆனால் இன்னும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் 450க்கும் அதிகமானோர் காணாமல் போய் உள்ளனர். இதுவரை 75 பேர் பலியாகி உள்ளனர். கேரளா மாநிலம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.