வைரல் செய்திகள்

வலையில் சிக்கிய திமிங்கலம்.. மீனவர்கள் செய்த நெகிழ்ச்சியான காரியம்!

Published

on

பொதுவாக எல்லா தொழில்களிலும் பெரிய அளவில் லாபம் வரும் போது அதை மொத்தமாக இருப்பு வைத்துக் கொள்வார்கள். அது தேவையோ தேவையில்லையோ, வருவதை ஏன் விட வேண்டும் என்று உற்பத்தி பொருட்களைச் சேகரித்து கொள்வார்கள். ஆனால், இதற்கு விதிவிலக்காக மீனவர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் வழக்கம் போல் கடலில் மீன்பிடித்தனர். அப்போது நல்ல பெரிய திமிங்கலம் ஒன்று மீன்வலையில் சிக்கியது. இதனை சற்றும் எதிர்பாராத மீனவர்கள், அந்த மீன் நமக்கு தேவையில்லை என்று எண்ணி, அதை கருணை உள்ளத்தோடு அப்படியே மீண்டும் கடலில் விட்டனர்.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் தெரியவில்லை. சுபம் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர, அதனை வனத்துறை அதிகாரி பர்வீன் கேசவன் ரீடுவீட் செய்துள்ளார். மீனவர்களின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version