வணிகம்
வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு..!
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து பல வெளிநாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் அவற்றுக்கு உள்ள சுங்க வரி மற்றும் ஐஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் இருந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தினைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவினை ஜூலை 3-ம் தேதியில் இருந்து அக்டோபர் 5 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி 370 நபர்கள் உயிர் இழந்துள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.