வைரல் செய்திகள்

கொரோனாவால் வேலை இழந்த இந்தியர்… துபாயில் கோடிக்கணக்கில் விழுந்த லாட்டரி பரிசு!

Published

on

கொரோனா பாதிப்பின் காரணமாக துபாயில் வேலை இழந்த இந்தியர் ஒருவருக்கு கோடிக்கணக்கில் பணம் லாட்டரி பரிசாக கிடைத்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் சஞ்சீவன். இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் துபாயில் வசித்து வந்தவருக்கு கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலை பறிபோனது. கடன் வாங்கியும் குடும்பத்தைக் காப்பற்ற முடியவில்லை என்பதால் சஞ்சீவனும் அவரது மனைவியும் தினமும் புதுப்புது பணி நேர்காணல்களுக்குச் சென்று வந்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் யதார்த்தமாக துபாய் லாட்டரி சீட்டு ஒன்றை சஞ்சீவன் வாங்கியுள்ளார். தற்போது அந்த சீட்டுக்கு அதிர்ஷ்டவசமாக சஞ்சீவனுக்குப் பரிசு விழுந்தது. இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை பரிசாகக் கிடைத்துள்ளதால் திக்குமுக்காடிப் போயுள்ளார் சஞ்சீவன்.

Trending

Exit mobile version