இந்தியா

சேர தமிழில் டிவிட் செய்த பினராயி விஜயன்.. கஜாவிற்கு கரம் கொடுத்த கேரளா!

Published

on

திருவனந்தபுரம்: கஜா புயல் நிவாரணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு வாரம் முன் வீசிய கொடூர கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

கஜா புயல் சேதத்தில் தமிழகத்திற்கு உதவ கேரளா அரசு கரம் கொடுத்து இருக்கிறது. தமிழகத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழகத்திற்கு உதவ முன்வந்து இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டிவிட் செய்துள்ளார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அவரது டிவிட்டர் டைம்லைன் முழுக்க தமிழ் டிவிட்டுகளால் நிரம்பி வழிகிறது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அவர் தனது டிவிட்டில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தெரிவிக்கறோம். புதன் கிழமை அமைச்சரவை அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு கொண்டோம். உணவு, துணி, ஆடைகள் உட்பட்ட 14 லாரி அவசர பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைத்தோம்.

seithichurul

Trending

Exit mobile version