இந்தியா

ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்ற கேரள முதல்வர் -கேரளாவில் விடுமுறை அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. எனவே, நாளை முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று முதலே பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் சென்று செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் கேரளாவில் தமிழக எல்லையில் உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள தமிழர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அந்த 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேரள முதல்வர் பினரயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

ஏற்கனவே கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் போது தமிழக எல்லையில் உள்ள மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் அதே போன்று கேரளாவிலும் 14ம் தேதி பொங்கல் தினத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ் பேசும் மக்கள் வாழும் 6 மாவட்டங்களிலும் ஏற்கனவே அறிவித்திருந்த 15ம் தேதி விடுமுறை என்பதை மற்றி நாளை 14ம் தேதி விடுமுறையாக அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது அந்த மாவட்டங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version