இந்தியா
கேரள பிஷப் பிராங்கோ கைது.. போலீஸ் அதிரடி!
கொச்சி: பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ள கேரளா பிஷப் பிராங்கோ தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் இவர் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். நேற்றுதான் இவரை தற்காலிகமாக நீக்குவதாக வாடிகன் சர்ச் அறிவித்தது.
இந்த பிஷப் விவகாரம் உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா பிஷப் பிராங்கோதான் கைது செய்யப்படும் முதல் கத்தோலிக் பிஷப் ஆவார்.