இந்தியா

கேரளாவில் இன்று ஒரேநாளில் தமிழகத்தை விட இருமடங்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Published

on

தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கட்டுக்கடங்காத அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கேரளாவில் இன்று ஒரே நாளில் 38,607 பேர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொகை தமிழகத்தின் ஒரு நாள் பாதிப்பை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்தனர் என்றும் இதனை அடுத்து ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை மொத்தம் 5259 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா இதுகுறித்து கூறிய போது சட்டமன்ற தேர்தல் காரணமாகத்தான் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது என்றும் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றை இரு மடங்காக உயர்த்தி உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version