இந்தியா
கேரளாவில் இன்று ஒரேநாளில் தமிழகத்தை விட இருமடங்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்
தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கட்டுக்கடங்காத அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கேரளாவில் இன்று ஒரே நாளில் 38,607 பேர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொகை தமிழகத்தின் ஒரு நாள் பாதிப்பை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.