இந்தியா
114 ஆண்டுகள் பழமையான தேக்குமரம்.. மிகப்பெரிய தொகைக்கு ஏலம்..!
கேரள வனப்பகுதியில் 114 ஆண்டுகள் பழமையான தேக்குமரம் ஒன்று கீழே விழுந்ததை அடுத்து அந்த மரத்தை ஏலம் விட்ட வனத்துறை அதிகாரிகள் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளதாக தெரிவித்துள்ளனர்
கடந்த 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் நடப்பட்ட தேக்கு மரங்களில் ஒன்று 114 ஆண்டுகளுக்கு கழித்து தானாகவே கீழே விழுந்தது. இதனை அடுத்து அந்த மரத்தை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள் அதை ஏலம் விட முடிவு செய்தனர். தரமான தேக்கு மரம் என்பதால் அந்த மரத்தை ஏலம் எடுக்க பல மர வியாபாரிகள் போட்டி போட்ட நிலையில் கேரளாவை சேர்ந்த விருத்தாச்சலம் டிம்பர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் அஜிஷ்குமார் சுமார் 45 லட்சம் ரூபாய்க்கு இந்த மரத்தை ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நிலம்பூர் தேக்கு என்ற கூறப்படும் இந்த தேக்கு மரம் மிகவும் புகழ் பெற்றது என்பதும் தரமான தேக்கு மரத்தை வாங்க அதிக நபர்கள் ஆர்வத்துடன் இருப்பதால் இந்த தேக்கு மரம் மிகப்பெரிய தொகைக்கு அதாவது 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசிய போது நிலம்பூர் தேக்கு என்றாலே உலக அளவில் பிரபலம் என்றும் அதனால் இந்த தேக்கு மரம் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்றும் ஆனால் இந்த அளவுக்கு 40 லட்ச ரூபாய் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
8 அடி தடிமன் கொண்ட அந்த மரம் மூன்று துண்டுகளாக ஏலம் விடப்பட்டது என்றும் மூன்று மீட்டருக்கு மேல் உள்ள பிரதான துண்டு 23 லட்சம் ரூபாய்க்கும் அதே மரத்தின் மீது இரண்டு துண்டுகள் 11 லட்சம், 5.25 லட்சம் ஆகிய தொகைக்கு ஏலம் போனதாக தெரிவித்துள்ளார். இந்த மரத்தை ஏலம் விட்டத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் 1909ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நடப்பட்ட இந்த மரம் கேரள வனப்பகுதியில் பாதுகாப்பு பகுதியில் இருந்தது என்றும் எட்டு மீட்டர் கன மீட்டர் கொண்ட இந்த மரம் விழுந்ததை அடுத்து நாங்கள் சேகரித்து தற்போது அதை விற்பனை செய்து உள்ளோம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரத்தை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வதற்காக கூடுதலாக 15,000 செலவானது என்றும் இந்த மரம் நிச்சயம் உள்ளூரில் மட்டும் இன்றி வெளியூரிலும் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் இந்த மரத்தை ஏலம் எடுத்த அஜீஷ்குமார் தெரிவித்துள்ளார்.