இந்தியா

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டது என்பதும் கடந்த சில நாட்களாக தேர்வு தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 14ஆம் தேதி வெளியிடப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கல்வித்துறை அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நாளை அதாவது ஜூலை 14-ஆம் தேதி மதியம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகள் கேரள அரசின் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் நாளை தங்களுடைய தேர்வு முடிவுகளை பார்ப்பதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பள்ளிகள் தற்போதைக்கு திறக்கும் எண்ணம் இல்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version