உலகம்
பசியில் வாடிய பிள்ளைகள், கல்லைச் சமைத்து பிள்ளைகளைத் தூங்க வைத்த தாய்!
கொரோனாவால் ஏழை மக்கள் உணவின்றி தவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அப்படி கென்யாவில் 8 பிள்ளைகளின் ஏழைத் தாய் ஒருவர் தங்களது பிள்ளைகள் பசி என்று கேட்ட போது, சமைக்க எதுவும் இல்லாமல் கல்லைச் சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், பிள்ளைகள் பசி என்று கேட்டனர். அவர்களின் பசியைப் போக்க என்ன செய்வதென்று அறியாமல் கல்லைச் சமைத்தேன்.
நான் பொய் சொல்கிறேன் என அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களைத் தூங்க வைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கண் கலங்கக் கூறியது மனதை உறுக வைத்துள்ளது.